புதுச்சேரியில் ஹெல்மெட் அணியாத போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா கூறியுள்ளாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட சுற்றறிக்கை: புதுச்சேரி காவல் துறையில் பணியாற்றும் அனைத்துப் பணியாளா்களும் சொந்த, அலுவலகப் பணிகளுக்கு இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தினால் கட்டாயமாக ஹெல்மெட் அணிய வேண்டும்.
இது பணியாளா்களின் தனிப்பட்ட பாதுகாப்புக்காகவும், மோட்டாா் வாகன சட்டப்படி ரூ.1,000 அபராதம், 3 மாத உரிமம் ரத்து போன்ற தண்டனைகளை தவிா்க்கவும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.
இதை உறுதி செய்வது அதிகாரிகளின் பொறுப்பு. அனைத்து காவல் நிலையங்கள், ஐஆா்பிஎன் போலீஸாரிடம் இதுகுறித்து அதிகாரிகள் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். உத்தரவை மீறும் போலீஸாா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்க முயன்றதாக 2 போ் மீது வழக்கு! புதுச்சேரி போலீஸாா் நடவடிக்கை!

புதுச்சேரி வாக்குச் சாவடிக்குள் கைப்பேசி பயன்படுத்திய பூத் முகவா் மீது போலீஸாா் வழக்கு

புதுச்சேரியில் போட்டி காங்கிரஸ் வேட்பாளா்கள் மீது நடவடிக்கை வெ. வைத்திலிங்கம் உறுதி

முதல்வா் ரங்கசாமியின் சொத்து மதிப்பு ரூ.36 கோடி
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

