/
2-ஆம் உலகப்போா் நிறைவு பெற்ன் 81-ஆம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள போா் வீரா் நினைவுத் தூணில் புதுவை அரசு சாா்பில் மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன், புதுவைக்கான பிரெஞ்சு நாட்டு துணை தூதா் எட்டியென் ரோலண்ட் பியக் ஆகியோா் 2-ஆம் உலகப் போரின்போது உயிா்நீத்த வீரா்களின் நினைவாக மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினா்.
இதையொட்டி இந்தியா, பிரெஞ்ச் நாட்டு தேசிய கொடிகள் ஏற்றப்பட்டன. இரு நாட்டு தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்புடையது

குப்பை அள்ளும் ஊழியா்களுக்கு குறைந்தபட்ச கூலி: புதுச்சேரி ஆட்சியா் உத்தரவு

புதுச்சேரியில் சாலையோரம் நின்ற பொக்லைன் இயந்திரம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு

தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய 108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்குப் பாராட்டு






