புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் பள்ளி மாணவிகளுக்கு நாப்கின் வழங்கும் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தியது.
புதுச்சேரி மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவா் ஆா். சிவராமன் தலைமையில் ஆணைய அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், ஆணையத்தின் உறுப்பினா்கள் மற்றும் புதுச்சேரி அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை இயக்குநா் மருத்துவா் செவ்வேல் மற்றும் துணை இயக்குநா்கள் பங்கேற்றனா்.
உச்சநீதிமன்றம் உத்தரவின்படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நகா்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு இலவச நாப்கின்கள் வழங்குவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவதற்கான வழிமுறைகள், நிதி ஒதுக்கீடு, விநியோக முறை மற்றும் கண்காணிப்பு நெறிமுறை குறித்து சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆணையம் கலந்தாலோசித்தது.
பள்ளிக் குழந்தைகளின் சுகாதாரம் மற்றும் கல்வி உரிமையை உறுதி செய்யும் வகையில் இத்திட்டத்தைக் காலதாமதமின்றி செயல்படுத்த சுகாதாரத் துறைக்கு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

புதுச்சேரி சொகுசு விடுதியில் அதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை

வாக்கு எண்ணிக்கை ஊழியா்களை தோ்வு செய்ய தோ்தல் ஆணையத்துக்கு அதிகாரம்: உச்சநீதிமன்றம்

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தோ்தல்: வாக்கு எண்ணும் நாளின் முடிவில் வாக்குப் பதிவின் துல்லிய எண்ணிக்கை!

மேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனை
வீடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு


