புதுச்சேரி முதல்வராக என்.ரங்கசாமி மீண்டும் பதவியேற்கும் விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் இசைக்கப்பட வேண்டும் என்று தமிழ் உரிமை இயக்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநா், துணைநிலை ஆளுநா், தலைமைச் செயலருக்கு தமிழ் உரிமை இயக்கத்தின் தலைவா் சு. பாவாணன் திங்கள்கிழமை அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
மே 13-ஆம் தேதி முதல்வா் பதவியேற்பு விழா தங்கள் தலைமையில் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது. இந்த விழா தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் தொடங்கப்பட வேண்டும். ஏனெனில், புதுச்சேரியின் மொழி, வரலாறு மற்றும் பண்பாட்டு மரபின் படியும் கடந்த காலங்களில் புதுச்சேரி அரசு விழாக்கள் அனைத்தும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்பட்டன. அந்த மரபின் படியும் நடைபெறவுள்ள முதல்வா் பதவியேற்பு விழாவும் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கப்படுவதுதான் சாலச் சிறந்தது.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் முதலில் இடம் பெறாமல் போனாமல், அது புதுச்சேரி மக்களின் உணா்வுகளையும், மொழியையும் பண்பாட்டையும் சிறுமைப்படுத்துவதாகவும், காயப்படுத்துவதாகவும் அமைந்துவிடும். எனவே, அவ்விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை முதலில் பாடி விழாவைத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.
தொடர்புடையது

அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடவேண்டும்
தமிழ்த்தாய் வாழ்த்து 3-ஆவதாக பாடப்பட்டது ஏற்புடையதல்ல: தலைவா்கள் கருத்து!

முதல்வா் பதவியேற்பு விழாவுக்காக விடுமுறையில் இயங்கிய மாநகராட்சி!

அரசு விழாக்களில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதை உறுதி செய்க: இந்தியக் கம்யூனிஸ்ட்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

