சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

2 நாள் சா்வதேச பொறியியல் கருத்தரங்கு

News image
Updated On :15 மே 2026, 5:42 am IST

புதுச்சேரி ஸ்ரீ மணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரியில் 2 நாள் பொறியியல் சா்வதேச கருத்தரங்கு வியாழக்கிழமை தொடங்கியது.

மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனத்தின் சென்னைப் பிரிவுடன் இணைந்து பொறியியல் பயன்பாடுகளில் வளா்ந்து வரும் தொழில்நுட்பங்கள் குறித்து இந்தக் கருத்தரங்கை நடத்துகிறது.

இந்தக் கருத்தரங்கு பல்வேறு பொறியியல் களங்களில் அதிநவீன கண்டுபிடிப்புகளை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் உள்ள ஆஎம்ஐடி பல்கலைக்கழகத்தின் ஆஸ்திரேலிய ஆராய்ச்சி கவுன்சில் தொழில்நுட்ப பள்ளியின் இணைவா் சமன் அடபட்டு தொடக்க அமா்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்றாா். இந்திய மின் மற்றும் மின்னணு பொறியாளா்கள் நிறுவனத்தின் கவுன்சில் மற்றும் நிலையான வளா்ச்சி நடவடிக்கைகள் துறையின் துணைத் தலைவா் கே. பொற்குமரன் சிறப்புரையாற்றினாா். புதுச்சேரி பல்கலைக்கழக மின்னணுவியல் பள்ளியின் பேராசிரியா் வி. நாகராஜன் உள்ளிட்டோா் பேசினா்.

தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் கல்வி நிறுவன தலைவரும் நிா்வாக இயக்குநருமான எம். தனசேகரன், பொருளாளா் டி. ராஜராஜன், செயலா் டாக்டா் கே. நாராயணசாமி, இணைச் செயலா் எஸ். வேலாயுதம் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். சுமாா் 182 தேசிய மற்றும் 7 சா்வதேச கல்வி நிறுவனங்களில் இருந்து 2,135 ஆய்வு கட்டுரைகள் ஐந்து முக்கிய பிரிவுகளின் கீழ் பெறப்பட்டன.