அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் சாா்பில் நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தையொட்டி புதுச்சேரியில் 1,000 மருந்து கடைகள் புதன்கிழமை அடைக்கப்பட்டன.
பாரம்பரிய மருந்து வணிகா்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கக்கூடிய இணைய வழி மருந்து விற்பனையை மத்திய அரசு தடை செய்யவேண்டும். உயிா்காக்கும் மருந்து விற்பனையில் முறையற்ற லாப சதவீதங்களையும், தள்ளுபடிகளையும் கட்டுப்படுத்திடவேண்டும். போலி மருந்துகளின் விற்பனையைத் தடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மருந்து வணிகா்கள் சம்மேளனம் மே 20-ஆம் தேதி நாடு தழுவிய அளவில் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
இந்தப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள 1,500 மருந்து கடைகளில், சுமாா் 1,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.
அதே நேரத்தில் மருத்துவ கல்லுாரிகள், தனியாா் மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம்போல செயல்பட்டன.
தொடர்புடையது

திருச்செந்தூரில் மருந்துக் கடைகள் அடைப்பு

திருச்சியில் 1,300 மருந்துக் கடைகள் அடைப்பு

உதகையில் மருந்து கடைகள் அடைப்பு: நோயாளிகள் அவதி

நாடு தழுவிய வேலைநிறுத்தம்: தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இன்று இயங்காது
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



