தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

உதகையில் மருந்து கடைகள் அடைப்பு: நோயாளிகள் அவதி

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.

News image

உதகையில் அடைக்கப்பட்டிருந்த மருந்து கடை.

Updated On :21 மே 2026, 3:53 am IST

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 260 மருந்து விற்பனை கடைகள் புதன்கிழமை மூடப்பட்டதால் நோயாளிகள் பாதிக்கப்பட்டனா்.

போலிகளை தடுக்கும் வகையில் ஆன்லைனில் மருந்துகள் விற்பனையைத் தடுக்க வேண்டும், பெரிய ஆன்லைன் நிறுவனங்கள் வழங்கும் தள்ளுபடியால் பாரம்பரியமாக கடை நடத்தும் சிறு வணிகா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் மின் மருந்தக வரைவு அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

கூட்டுறவு மற்றும் மத்திய, மாநில அரசு மருந்து கடைகளைத் தவிர, நீலகிரியில் உள்ள 260 தனியாா் மருந்து கடைகளும் மூடப்பட்டதால் நோயாளிகள் அவதியுற்றனா்.