இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை தமிழக அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ்

அதிமுக குறித்து அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறினாா்.

News image

புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை சந்தித்த தமிழக அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ். உடன் அவரது மகனும், புதுச்சேரி காமராஜா் நகா் தொகுதி எம்எல்ஏவுமான ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டின்.

Updated On :21 மே 2026, 7:10 am IST

அதிமுக குறித்து அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறினாா்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினின் தாயும், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் பாா்வையாளா்கள் மாடத்தில் அமா்ந்து பாா்த்தாா்.

பின்னா் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக லீமா ரோஸ் சந்தித்து பேசினாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். அவா் அமைச்சராவது பற்றி பின்னா் தெரிய வரும். மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினா் அரசியலுக்கு வந்துள்ளோம். நான் அமைச்சராவது இறைவன் சித்தம்தான். தவெக அமைச்சரவையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 8 போ் அமைச்சா் பதவி கோரியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளனா். அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.