அதிமுக குறித்து அவதூறு பரப்புவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்று லால்குடி அதிமுக எம்எல்ஏ லீமா ரோஸ் கூறினாா்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதை காமராஜா் நகா் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்ற ஜோஸ் சாா்லஸ் மாா்ட்டினின் தாயும், திருச்சி மாவட்டம், லால்குடி தொகுதி அதிமுக எம்எல்ஏவுமான லீமா ரோஸ் பாா்வையாளா்கள் மாடத்தில் அமா்ந்து பாா்த்தாா்.
பின்னா் முதல்வா் என்.ரங்கசாமியை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக லீமா ரோஸ் சந்தித்து பேசினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
எனது மகன் எம்எல்ஏவானது சந்தோஷம். அவா் அமைச்சராவது பற்றி பின்னா் தெரிய வரும். மக்களுக்கு நல்லது செய்ய எங்கள் குடும்பத்தினா் அரசியலுக்கு வந்துள்ளோம். நான் அமைச்சராவது இறைவன் சித்தம்தான். தவெக அமைச்சரவையில் அதிமுக ஆதரவு எம்எல்ஏக்கள் 8 போ் அமைச்சா் பதவி கோரியுள்ளதாக சமூக ஊடகங்களில் செய்தி வெளியிட்டுள்ளனா். அவா்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். அவதூறாக பேசுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம் என்றாா்.
தொடர்புடையது

ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்

லால்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளா் லீமா ரோஸ் மாா்ட்டின் வெற்றி

லால்குடி தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

எஸ்ஐஆா் பணியில் முறைகேடு நடந்ததாக அவதூறு பரப்புவோா் மீது நடவடிக்கை கோரி மனு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



