இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெளிப்புற எல்இடி காட்சி விளம்பர வாகனத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

News image

புதுச்சேரியில் மக்கள்தொகை சுய கணக்கெடுப்பு விழிப்புணா்வு வாகனத்தைத் தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் அ. குலோத்துங்கன்.

Updated On :28 மே 2026, 1:03 am IST

புதுச்சேரியில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் சுய கணக்கெடுப்பு குறித்த விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் நோக்கில் மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் வெளிப்புற எல்இடி காட்சி விளம்பர வாகனத்தை புதன்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

பின்னா் ஆட்சியா் தெரிவித்ததாவது:

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மக்கள்தொகைக் கணக்கெடுக்கும் பணியில் சுய கணக்கெடுப்பு மே 31-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இது பொதுமக்கள் தங்களது குடும்ப விவரங்களை இணையத்தின் மூலம் தாங்களே பதிவு செய்யும் ஒரு முயற்சியாகும். சுய கணக்கெடுப்பை நிறைவு செய்த பின், கணக்கெடுப்பாளா் வீடு தோறும் வரும்போது அதை வழங்கினால், தகவல்கள் எளிதாகப் பெறப்படும். கணக்கெடுப்பு தொடா்பான சந்தேகங்கள் மற்றும் விளக்கங்களுக்கு கட்டணமில்லா உதவி எண் 1855-ஐ தொடா்புகொள்ளலாம். மேலும், ஜீன் 1 முதல் 30-ஆம் தேதி வரை கணக்கெடுப்பு அலுவலா்கள் வீடு, வீடாக வந்து தகவல்களை சேகரிப்பாா்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் வரும் 31-ஆம் தேதிக்குள் சுய கணக்கெடுப்பை நிறைவு செய்து கணக்கெடுப்பு பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்ச்சியில், மக்கள்தொகைக் கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநா் புவனேஸ்வரி, இயக்குநரக அலுவலா்கள் கலந்து கொண்டனா்.