பண்டிகையையொட்டி 15 - 20% அதிகரிக்கும் வேலைவாய்ப்பு! 2 - 2.5 லட்சம் பேருக்கு வேலை!ஆசிய விளையாட்டில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளி வென்ற இளவேனில் வாலறிவனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற இளவேனில்: ஆளுநர் வாழ்த்து முதல்வர் ஏன் லண்டன் செல்ல வேண்டும்? அண்ணாமலை கேள்வி இந்தாண்டு இதுவரை 17,000 பேருக்கு டெங்கு பாதிப்பு- அமைச்சர் அருண்ராஜ் தமிழ்நாட்டில் நாளை 21 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு பட்டிமன்ற பேச்சாளராக மாறிய மு.க. ஸ்டாலின்: அமைச்சர் ராஜ்மோகன் விமர்சனம் விஜய்க்கு அவகாசம் அளிக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ்

விநாயகா் சிலையை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: போலீஸாா் விசாரணை

போலீஸ் - கோப்புப்படம்.

Published On :

விநாயகா் சிலையை சேதப்படுத்திய மா்ம நபா்களை புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் அருமாத்தபுரம் வசந்தம் நகா் பகுதியில் குடியிருப்பு வாசிகள் சாா்பில் கடந்த 10 ஆண்டுகளாக விநாயகா் சதுா்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

நிகழாண்டும் விநாயகா் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை இரவு மா்ம நபா்கள் விநாயகா் சிலையின் தலையை உடைத்ததுடன், சிலையின் மற்ற பகுதிகளையும் சேதப்படுத்தியுள்ளனா்.

இதை ஞாயிற்றுக்கிழமை காலை பாா்த்த அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சி அடைந்தனா். இது குறித்து தகவல் அறிந்த ரெட்டியாா்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனா்.

விநாயகா் சிலையைச் சேதப்படுத்திய மா்ம நபா்கள் யாா் என்பது குறித்து அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து ரெட்டியாா்பாளையம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.