சிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்சிங்கப்பெண் அதிரடிப்படை திட்ட இலச்சினையை வெளியிட்டார் முதல்வர் விஜய்!பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!வர்த்தகர்களை விசாரணை அமைப்பு கொண்டு மிரட்டும் பாஜக: பகவந்த் மான்!
/

கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம்

திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:55 am IST

திருக்கோவிலூர் அருகே அருணாபுரம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் புதன்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
513-ஆவது பங்குனி பெருவிழாவை முன்னிட்டு, இந்தக் கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு கூத்தாண்டவர் கரக உற்சவம், திருநங்கைகள், பொதுமக்கள் தாலிக் கட்டுதல் நிகழ்வு, திருமண கோலத்தில் இந்திர விமானத்தில் திருத்தேர் பவனி ஆகியவை நடைபெற்றன.
இதையடுத்து, புதன்கிழமை காலை 9 மணிக்கு கூத்தாண்டவருக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. யுத்த கோலத்தில் தேரை வடம் பிடித்து இழுத்தல் நிகழ்வு நடைபெற்றது.
தேரோட்டத்தின்போது, மேளதாளத்துடன் திருநங்கைகள் நடன நிகழ்வு நடைபெற்றது. தேர், முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாலை 5 மணியளவில் நிலையை அடைந்தது.
பின்னர், மாலை 5.30 மணியளவில் கூத்தாண்டவர் களபலி உற்சவமும் (அரவாணிகள் திருவிழா), இரவு 10 மணிக்கு கூத்தாண்டவர் இந்திர விமானத்தில் காட்டுக் கோயிலுக்குச் செல்லும் நிகழ்வும் நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் விழாக் குழுவினர், கிராம மக்கள் செய்திருந்தனர். அரகண்டநல்லூர் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர். விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக, வருகிற ஏப்ரல் 10-ஆம் தேதி மாலை 5 மணிக்கு காட்டுக் கோயிலில் தருமர் பட்டாபிஷேகம் நிகழ்வு நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.