மயிலத்தை அடுத்த கூட்டேரிப்பட்டில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் எம்.டி. நடுநிலைப் பள்ளியில் 96}ஆவது ஆண்டு விழா, மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா ஆகியவை புதன்கிழமை நடைபெற்றன.
பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளித் தலைமை ஆசிரியர் வி.குட்டிபாபு வரவேற்றார்.தாளாளர் அருள் தந்தை எஸ்.நீதிநாதன் தலைமை வகித்தார். உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் பெலிக்ஸ், கோவர்த்தனன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு, பள்ளியில் நிகழ் கல்வியாண்டில் 5}ஆம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளுக்கு பட்டம், கேடயம், நினைவுப் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர். தொடர்ந்து, பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆசிரியர்கள் விஜயலட்சுமி, ஜெயராமன் ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். ஆசிரியர் எலிசா நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








