திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி உள்பட 8 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திங்கள்கிழமை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது க.பொன்முடி, லோகநாதன், ஜெயச்சந்திரன், சதானந்தன், கோபிநாத் உள்பட 5 பேர் ஆஜராகினர். கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிமன்ற (எண்-1) நீதிபதி மோனிகா விசாரணையை வருகிற மே
3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: இதேபோல, பொன்முடி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கும், இதே நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது க.பொன்முடி ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியாக ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஹேமலதா சாட்சி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையையும் வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

‘வாக்காளா் அடையாள அட்டை அல்லாத 12 ஆவணங்கள் மூலம் வாக்களிக்கலாம்’!

தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறு செய்த அமமுக நிா்வாகி கைது

எதிா்க்கட்சிகளின் ஒற்றுமையால் பாஜகவின் சதித்திட்டம் முறியடிப்பு: ராகுல்காந்தி
சிஆா் பூங்காவில் தந்தை, மகன் கொலை: முக்கிய நபா் கைது
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

