ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் மீண்டும் வெற்றி - மும்பையை வீழ்த்தியது!ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

பொன்முடிக்கு எதிரான வழக்குகளின் விசாரணை மே 3-க்கு ஒத்திவைப்பு

திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற

Updated On :9 ஏப்ரல் 2018, 11:37 pm

திமுக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி மீதான சொத்துக் குவிப்பு, செம்மண் குவாரி முறைகேடு வழக்குகளின் விசாரணையை வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து விழுப்புரம் நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பூத்துறையில் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி  உள்பட 8 பேர் மீது தொடுக்கப்பட்ட வழக்கு திங்கள்கிழமை விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது க.பொன்முடி, லோகநாதன், ஜெயச்சந்திரன், சதானந்தன்,  கோபிநாத் உள்பட 5 பேர் ஆஜராகினர். கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், கோதகுமார் ஆகிய 3 பேர் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கை விசாரித்த கூடுதல் சார்பு நீதிமன்ற (எண்-1) நீதிபதி மோனிகா விசாரணையை வருகிற மே 
3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
சொத்துக்குவிப்பு வழக்கு: இதேபோல, பொன்முடி உள்ளிட்டோர் மீது தொடுக்கப்பட்ட சொத்துக் குவிப்பு வழக்கும், இதே நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது க.பொன்முடி ஆஜரானார். அவரது மனைவி விசாலாட்சி ஆஜராகவில்லை. அப்போது வழக்கின் முக்கிய சாட்சியாக ஓய்வு பெற்ற சார்பதிவாளர் ஹேமலதா சாட்சி அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையையும் வருகிற மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி மோனிகா உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.