ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

ஆசிரியர்களுக்கு ஊதியம்: எம்எல்ஏ வழங்கினார்

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தனியாக நியமிக்கப்பட்ட பிளஸ் 2 பாட ஆசிரியர்கள் 3 பேருக்கான மாத ஊதியத்தை அ.பிரபு எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.

Updated On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் தனியாக நியமிக்கப்பட்ட பிளஸ் 2 பாட ஆசிரியர்கள் 3 பேருக்கான மாத ஊதியத்தை அ.பிரபு எம்எல்ஏ தனது சொந்த நிதியிலிருந்து வழங்கினார்.
 கள்ளக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவில் எம்எல்ஏ அ.பிரபு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், பள்ளியில் பிளஸ் 2 மாணவிகளுக்கு பயிற்றுவிப்பதற்காக ஆசிரியர் பற்றாக்குறை இருந்த நிலையில், தனியாக நியமிக்கப்பட்ட 3 ஆசிரியர்களுக்கான முதல் மாத ஊதியமாக தனது சொந்த செலவில் தலா ரூ.5 ஆயிரம் வீதம் ரூ.15 ஆயிரத்தை தலைமை ஆசிரியரிடம் எம்எல்ஏ வழங்கினார்.
 மேலும், கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் அ.பிரபு எம்எல்ஏ தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், சாரண மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு சீருடை தைப்பதற்கு அவரது சொந்த நிதியிலிருந்து ரூ.15ஆயிரத்தை தலைமை ஆசிரியரிடம் அ.பிரபு காசோலையாக வழங்கினார்.
 நிகழ்ச்சிகளில் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ராமச்சந்திரன், மார்கரெட், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் கோமுகி மணியன், மாநில கபடி கழகத் தலைவர் கே.பி.பாண்டியன் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.