குழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஆக. 30 வரை மிதமான மழைக்கு வாய்ப்புஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு: சீன அதிபா் - பிரதமா் மோடி சந்திக்க வாய்ப்புதிருவண்ணாமலை கோயிலில் செப்.1 முதல் கைப்பேசிக்குத் தடை

பள்ளிகளுக்கு கதை அருவி தொகுப்பு அட்டைகள் அளிப்பு

திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 25 அரசுப் பள்ளிகளுக்கு கதை அருவி தொகுப்பு அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

திருக்கோவிலூர் ஒன்றியத்தில் 25 அரசுப் பள்ளிகளுக்கு கதை அருவி தொகுப்பு அட்டைகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. 
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தபோதிலும், மாணவர்களை படிக்க வைப்பதென்பது, ஆசிரியர்களுக்கு கடினமான செயலாக 
உள்ளது. 
மாணவர்கள் தாமாகவே முன்வந்து, ஆர்வத்துடன் வாசிப்பதற்கு ஏதுவாக, சென்னையில் உள்ள ராஜலட்சுமி-சீனுவாசன் அறக்கட்டளையானது, தலா ஒரு அரசுப் பள்ளிக்கு ரூ.1,050 மதிப்பிலான நூறு கதை அருவி தொகுப்பு அட்டைகள் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 
இதையடுத்து, இந்த அறக்கட்டளை சார்பில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளி மற்றும்  நடுநிலைப் பள்ளிகளுக்கு, கதை அருவி தொகுப்பு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 
 திருக்கோவிலூர் வட்டார வள மையத்தில் இருந்து, இந்த கதை அருவி தொகுப்பு அட்டைகளை கல்வி மாவட்ட அலுவலர் த.விஜயலட்சுமி, சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு திங்கள்கிழமை வழங்கினார். அப்போது, வட்டாரக் கல்வி அலுவலர் இரா.முரளிகிருஷ்ணன், நல்லாசிரியர் கு.நெடுஞ்செழியன் ஆகியோர் உடனிருந்தனர். 
 கதை அருவி தொகுப்பு அட்டைகளை அறக்கட்டளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் பிரபாகரன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.