உளுந்தூர்பேட்டை நகரில் குற்றச் செயல்களை தடுப்பதற்காக 20 இடங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாட்டுக்காக திங்கள்கிழமை தொடக்கி வைக்கப்பட்டன.
விழுப்புரம் மாவட்ட காவல் துறை, ரோட்டரி சங்கம் ஆகியவை சார்பில் உளுந்தூர்பேட்டை நகரில் பேருந்து நிலையம், வங்கிகள், சந்தைகள் மற்றும் மக்கள் கூடும் இடங்கள், அனைத்துத் தெருக்கள் உள்பட 20 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் கட்டுப்பாட்டு அறை பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
பதிவாகும் காட்சிகளை அங்கிருந்தபடியே காவலர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பர்.
இந்த கண்காணிப்புக் கேமராக்களை பயன்பாட்டுக்காக வடக்கு மண்டல காவல்துறைத் தலைவர் பி.நாகராஜ் தொடக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், உளுந்தூர்பேட்டை துணை கண்காணிப்பாளர்
பி.ராஜேந்திரன், ரோட்டரி சங்கத் தலைவர் ஜெ.திலீப், முன்னாள் ரோட்டரி சங்க முன்னாள் கவர்னர்கள் வழக்குரைஞர் மு.அன்பழகன், வின்சென்ட் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உளுந்தூர்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் ஷாகுல் அமீது, போக்குவரத்து ஆய்வாளர் கோவிந்தசாமி, உதவி ஆய்வாளர் செல்வநாயகம் உள்ளிட்ட காவலர்கள், ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதால் என்னென்ன நன்மைகள்?

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நிலைப்பாடு; அமைச்சர் நிர்மல் குமார் பதில்! | TVK
16 ரன்னில் ரிவிவ் எடுக்க தவறிய ஆப்கானிஸ்தான்..! அரைசதம் கடந்த கே.எல். ராகுல்!






