மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

சம்ஸ்கிருதத்தில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள் நூல் வெளியீடு 

விழுப்புரத்தில் சம்ஸ்கிருத மொழி அறிஞர் வே.இந்திரஜித்தின் "திருக்குறள் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு நூல்' ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.

Updated On :9 ஜூலை 2018, 4:00 am

விழுப்புரத்தில் சம்ஸ்கிருத மொழி அறிஞர் வே.இந்திரஜித்தின் "திருக்குறள் சம்ஸ்கிருத மொழிபெயர்ப்பு நூல்' ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
 விழுப்புரம், புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பிராக்ஸின் படிப்பகத்தில் உலக இலக்கியப் பேரவையின் இரண்டாம் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. உலக இலக்கியப் பேரவைத் தலைவர் மோகனசுந்தரம் தலைமை வகித்தார். எழுத்தாளர் இதயவேந்தன், மருதம் அமைப்பாளர் ரவிகார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 சம்ஸ்கிருத மொழி அறிஞர், திருவாரூர் வே.இந்திரஜித் கலந்து கொண்டு தமிழ்-சம்ஸ்கிருதம் பக்தி இலக்கியங்களுக்கிடையேயான ஒப்பியல் ஆய்வுரை வழங்கினார்.
 தொடர்ந்து, அவர் சம்ஸ்கிருதத்தில் மொழி பெயர்த்த திருக்குறள் நூலை விழுப்புரம் டாக்டர் எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் முதல்வர்(பொ) ரவிசங்கர் வெளியிட, தமிழாசிரியர் கிருஷ்ணமூர்த்தி பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில், எழுத்தாளர் விக்கிரமன், அனவரதன், இளந்திணயன், ஜெஸ்ரீல், ராமமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராக்ஸிஸ் படிப்பக நிர்வாக இயக்குநர் ராஜ்குமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.