தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பழைய வெடிகளை கொளுத்திய சிறுவர்கள் மூவர் காயம்

திருக்கோவிலூர் அருகே பழைய வெடிகளில் இருந்து மருந்தை எடுத்துக் கொளுத்திய பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் தீக்காயமடைந்தனர்.

Updated On :9 ஜூலை 2018, 4:01 am

திருக்கோவிலூர் அருகே பழைய வெடிகளில் இருந்து மருந்தை எடுத்துக் கொளுத்திய பள்ளிச் சிறுவர்கள் 3 பேர் தீக்காயமடைந்தனர்.
 திருக்கோவிலூர் அருகே மழவந்தாங்கலில் உள்ள முருகன் கோயிலில் கடந்த 29-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்போது, பயன்படுத்தப்பட்ட வெடிகளில் சில, வெடிக்காதவையாக கிடந்தன.
 அந்த வெடிகளை அதே கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான ராஜீவ்காந்தி மகன் பிரமோத் (9),முருகன் மகன் காந்திச்செல்வன்(8), ரமேஷ் மகன் ராகுல்(8) ஆகியோர் சனிக்கிழமை இரவு தேடி எடுத்து, அதிலிருந்த வெடி மருந்தை மொத்தமாகக் கொட்டி கொளுத்தினர். அப்போது, திடீரென வெளிப்பட்ட அதிகப்படியான தீயில் பிரமோத், காந்திச்செல்வன், ராகுல் ஆகியோர் சிக்கி காயமடைந்தனர். உடனே, அவர்கள் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைக்காக, சென்னை, கீழ்ப்பெரும்பாக்கம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். இது குறித்து கண்டாச்சிபுரம் போலீஸார் விசாரிக்கின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.