விக்கிரவாண்டி அருகே டிராக்டரில் இருந்து தவறி விழுந்த விவசாயி சனிக்கிழமை உயிரிழந்தார்.
கண்டமங்கலம் அருகே பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் வெங்கடேசன்(48). விவசாயி. இவர், சனிக்கிழமை விக்கிரவாண்டி அருகே உள்ள வீடூர் பகுதியில் விஸ்வநாதன் என்பவரது சவுக்கு தோப்புக்கு வந்தார். அப்போது, டிராக்டரில் அமர்ந்து பயணித்துள்ளார். டிராக்டரை பெரியபாபுசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகன் மணி (45) என்பவர் ஓட்டியுள்ளார். அப்போது, டிராக்டரில் இருந்து நிலை தடுமாறி வெங்கடேசன் கீழே விழுந்தார். பின்னால் வந்த டிரெய்லர் சக்கரம் ஏறியதில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து அவர் புதுச்சேரியில் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே வெங்கேடசன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விக்கிரவாண்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை! செய்திகள் நேரலை
கட்சி மாறி வாக்களித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்... மாநிலங்களவை தேர்தலில் பாஜக ஆதரவு சுயேச்சை வேட்பாளர் வெற்றி!
உலகின் மிகவும் திறன்வாய்ந்த மையமாக இந்தியா: பிரதமர் மோடி

ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!
விடியோக்கள்

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK

மத்திய அரசுக்கு எதிரான கருத்துகள், விமர்சனங்கள்! ஆளுநர் உரை | TN assembly | Governor speech


