கள்ளக்குறிச்சியில் சிதம்பரம்பிள்ளை சாலையில் அமைந்துள்ள பெரியாண்டச்சி பத்ரகாளி அம்மன் கோயிலில் ஆடித் திருவையொட்டி பால்குடம், அக்னிசட்டி ஊர்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆடித் திருவிழா கடந்த 15-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில், சனிக்கிழமை (ஜூலை 21) அதிகாலை 5 மணிக்கு விக்னேஷ்வரபூஜை, 108 கோ மாதா பூஜை, கணபதி ஹோமம் ஆகியவை நடைபெற்றன. அன்று இரவு 7 மணிக்கு பெரியாண்டிச்சி பத்ரகாளி திருவீதி உலா நடைபெற்றது.
ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து பக்தர்கள் கோமுகி நதிக் கரைக்குச் சென்றனர். அங்கு சிறப்பு பூஜைகள் செய்து சக்தி அழைத்தனர். அப்போது, பக்தர்கள் செவ்வாடை அணிந்து 108 பால்குடம், 108 அக்னி சட்டிகளை தலையில் ஏந்தியவாறு கச்சேரி சாலை, சேலம் - சென்னை நெடுஞ்சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோயிலை அடைந்தனர். இதையடுத்து கோயிலில் அம்மனுக்கு பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து அம்மனுக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து, கோயில் முன்பாக காளிக்கோட்டை இடிக்கும் நிகழ்ச்சி, மயான சூறை விடுதல் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர், ஊர் மக்கள் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடா்ந்து அதிகரிப்பு! மே மாதத்தில் ரூ.59,000 கோடிக்கு கொள்முதல்!

ஆற்று மணல் திருட்டு: இருவா் மீது வழக்கு

ஏா் பின்னது உலகம்...

ஜூன் 17-இல் புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்! முதல்வா் என்.ரங்கசாமி
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


