கேரளத்தில் பட்டாசு வெடித்து விபத்து: 12 பேர் பலி; 40 பேர் படுகாயம்மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுதமிழ்நாட்டில் மாற்றத்தை யாராலும் தடுக்க முடியாது : சந்திரபாபு நாயுடுஇளைஞர்களுக்கும் 'இருசக்கர வாகன' மானியம்! அதிமுகவின் மேலும் 10 வாக்குறுதிகள்!வில்லிவாக்கத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் இறுதிக்கட்ட பிரசாரம்!சொந்தத் தொகுதியில் தோற்றுவிடுவோம் என்று விசில் சின்னத்தைத் திருடியவர்கள்: விஜய் சூசகம்கரூர் அடிமையை தொகுதி மாற்றியது ஏன்? நெரிசல் சம்பவம் குறித்து அதிரடியாகப் பேசிய விஜய்தேர்தலுக்குத் தயாராகும் தலைநகர் சென்னை! களம் எப்படியிருக்கிறது?ஒரே தொகுதிக்கு 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!
/

ஏப்.17-இல் கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா தொடக்கம் 

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி, மே 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 

Updated On :29 மார்ச் 2018, 3:58 am

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கூத்தாண்டவர் கோயில் சித்திரைப் பெருவிழா வரும் ஏப்ரல் 17-ஆம் தேதி தொடங்கி, மே 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
 உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்தில் வரலாறு சிறப்புமிக்க கூத்தாண்டவர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் சித்திரைப் பெருவிழா ஏப்ரல் 17-ஆம் தேதி சாகை வார்த்தலுடன் தொடங்குகிறது.
 18-ஆம் தேதி பந்தலடி தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் தாலி கட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மகாபாரத சொற்பொழிவு தொடங்கி, தொடர்ந்து 18 நாள்கள் விழா நடைபெறுகிறது.
 19-ஆம் தேதி சந்தனுசரிதம் நிகழ்ச்சியும், இரவு சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன. 20-ஆம் தேதி பீஷ்மர் பிறப்பும், 21-ஆம் தேதி தர்மர் பிறப்பும், 22-ஆம் தேதி பாஞ்சாலி பிறப்பும், 23-ஆம் தேதி பகாசூரன் வதமும், 24-ஆம் தேதி பாஞ்சாலி திருமணமும், 25-ஆம் தேதி கூத்தாண்டவர் பிறப்பும் நடைபெறுகின்றன.
 26-ஆம் தேதி ராஜசுய யாகமும், 27-ஆம் தேதி விராடபர்வம் நிகழ்ச்சியில் தெய்வநாயகம் செட்டியார் தோப்பில் வெள்ளிக்கால் நடும் நிகழ்ச்சியும், 28-ஆம் தேதி கிருஷ்ணன் தூதும், 29-ஆம் தேதி அரவான் பலியும், கூத்தாண்வர் சுவாமிக்கு பாலாயணமும், 30-ஆம் தேதி மாலை கம்பம் நிறுத்தும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.
 மே 1-ஆம் தேதி இரவு சுவாமிக்கு கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதுதான் முக்கியமான விழாவாகும். இந்த விழாவில் மும்பை, டெல்லி, புனே, சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் வந்து கலந்து கொள்வர்.
 பின்னர், திருநங்கைகள் தங்களை மணப்பெண்களைப்போல அலங்கரித்துக்கொண்டு கோயிலில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொள்வார்.
 அன்று இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வர்.
 மே 2-ஆம் தேதி அரவான் சிரசுக்கு முதல்மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 பின்னர், அரவான் சுவாமிக்கு 108, 1,008 தேங்காய் என சூரைத் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி, அரவான் களபலி, திருநங்கைகள் தாலி அகற்றும் நிகழ்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன.
 3-ஆம் தேதி விடையாத்தியும், 4-ஆம் தேதி தர்மர் பட்டாபிஷேகமும் நடைபெறுகின்றன.
 
 
 
 
 
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.