விழுப்புரம் நகரில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீ ஜனகவல்லி தாயார் ஸமேத ஸ்ரீ வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் வைகாசி மாத பிரம்மோத்ஸவம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
மாலையில் பகவத் அனுக்ஞை, மிருத் ஸங்கிரனம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி, கருடப்ரதிஷ்டை ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.
தொடர்ந்து, திங்கள்கிழமை காலை கொடி மர பூஜை நடைபெறும். அதன்பிறகு அம்ஸ வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம், கருட வாகனம் என நாள்தோறும் பெருமாள் விஷேச வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
வருகிற 27-ஆம் தேதி திருப்பல்லக்கு, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வீதி உலா 29-ஆம் தேதி நடைபெறும். வைகாசி பிரம்மோத்ஸவம் வருகிற 31-ஆம் தேதி திருமஞ்சனம், புஷ்பயாகம், விடையாற்றி உற்சவத்துடன் நிறைவடைகிறது.
இவ்விழாவையொட்டி, கோயில் முழுவதும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சர்வதேச பயங்கரவாதத்தின் மையப்புள்ளி பாகிஸ்தான்: ராஜ்நாத் சிங்

மே 4, 5-ல் சோளிங்கா் மலைக்கோயில் ரோப்காா் சேவை ரத்து

கந்துலா சுலோச்சனா ராணியாக அனுபமா பரமேஸ்வரன்!

பணமோசடி வழக்கு: ஐ-பேக் இயக்குநர் வினேஷ் சண்டேலுக்கு ஜாமீன்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

