/

19,425 லிட்டர் எரிசாராயம் அழிப்பு

செஞ்சி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான 19,425 லிட்டர் எரிசாராயம் நீதிபதி முன்னிலையில் ஆற்றில் ஊற்றி அழிக்கப்பட்டது.

Updated On :5 நவம்பர் 2018, 9:20 am IST

செஞ்சி அருகே பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் மதிப்பிலான 19,425 லிட்டர் எரிசாராயம் நீதிபதி முன்னிலையில் ஆற்றில் ஊற்றி அழிக்கப்பட்டது.
 செஞ்சியை அடுத்த அவலூர்பேட்டையில் 555 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 19,425 லிட்டர் எரிசாராயம்
 கடந்த மாதம் மதுவிலக்கு போலீஸாரின் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சாராயத்தின் சந்தை மதிப்பு ரூ.27 லட்சத்து 75ஆயிரம் ஆகும்.
 எரிசாராயத்தை செஞ்சி நீதித்துறை நடுவர் எம்.வீரணன் (பொறுப்பு) உத்தரவுப்படி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதியின் பேரில், மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் காவல் கண்காணிப்பாளர் மேற்பார்வையில், செஞ்சி மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி மற்றும் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸார் அழிக்க நடவடிக்கை எடுத்தனர்.
 அதன்படி, நீதித்துறை நடுவர் எம்.வீரணன், செஞ்சி தலைமை எழுத்தர் பாபுதீன் முன்னிலையில் செஞ்சியை அடுத்த மேல்களவாய் பகுதியில் உள்ள சங்கராபரணி ஆற்றில் சாராயம் ஊற்றி தீ வைத்து அழிக்கப்பட்டது. பாதுகாப்புக்காக செஞ்சி தீயணைப்பு நிலைய தீயணைப்பு வாகனம் நிறுத்தப்பட்டிருந்தது.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.