எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

64 இடங்களில் போலீஸார் வாகனத் தணிக்கை

தீபாவளி பண்டிகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

Updated On :5 நவம்பர் 2018, 9:20 am IST

தீபாவளி பண்டிகையொட்டி பாதுகாப்பு ஏற்பாடாக மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
 தீபாவளி பண்டிகையை அமைதியான முறையில் கொண்டாட மாவட்ட காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. தீபாவளி பண்டிகை வரை விடுமுறை எடுக்கக் கூடாது என்று போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
 இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டம் முழுவதும் 64 இடங்களில் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சாலைத் தடுப்புகள் அமைத்து அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனைக்கு உள்படுத்தி வருகின்றனர்.
 தங்கும் விடுதிகளிலும் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் சென்று வாகனங்களை ஆய்வு செய்தார். இதேபோன்று, திண்டிவனம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை என மாவட்டம் முழுவதும் டி.எஸ்.பிகள், காவல் ஆய்வாளர்கள் உள்பட 1500 போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.