இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

மது கடத்தல்: இளைஞர் கைது

ஆரோவில் அருகே புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

Updated On :8 அக்டோபர் 2018, 8:56 am IST

ஆரோவில் அருகே புதுச்சேரியிலிருந்து காரில் மது கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.
 விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் அருகேயுள்ள பட்டானூர் சோதனைச்சாவடியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
 அப்போது, புதுச்சேரியிலிருந்து திண்டிவனம் நோக்கி வந்த காரை மடக்கி சோதனையிட்டனர். அதில், புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் 117 இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.
 இது தொடர்பாக காரில் வந்தவரிடம் நடத்திய விசாரணையில், அவர், சென்னை நன்மங்கலத்தைச் சேர்ந்த கண்ணன் மகன் சங்கர்(31) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை வாங்கி சென்னைக்கு கடத்திச் செல்வதும் தெரிய வந்தது.
 இதையடுத்து, கார் மற்றும் மதுப் புட்டிகளை பறிமுதல் செய்த போலீஸார், அவற்றை கோட்டக்குப்பம் மது விலக்குப் பிரிவில் ஒப்படைத்தனர். இது குறித்து கோட்டக்குப்பம் மது விலக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.