விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை மணல் கடத்தலை தடுக்க விரைந்து சென்ற டிஎஸ்பியின் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டி.எஸ்.பி, காவலர் ஆகியோர் காயமடைந்தனர்.
விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பியான வீமராஜ், மணல் கடத்தல் தடுப்புப் படை பொறுப்பு அதிகாரியாகவும் இருந்து வருகிறார். இவருக்கு கள்ளக்குறிச்சி பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக ஞாயிற்றுக்கிழமை மாலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, உடனடியாக விழுப்புரத்திலிருந்து காவல்துறை வாகனத்தில் புறப்பட்டார்.
காரை முதல் நிலைக் காவலர் சௌந்தரராஜன் ஓட்டினார். சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில், அரசூரை கடந்து செல்லும்போது, தனியார் பொறியியல் எதிரே மாடு ஒன்று திடீரென குறுக்கே வர, ஓட்டுநர் பிரேக் பிடித்து காரை நிறுத்த முயன்றார்.
ஆனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கார் சாலையின் வலது புறமாக தலைகுப்புற கவிழ்ந்தது. இதில், டி.எஸ்.பி. வீமராஜ், ஓட்டுநர் சௌந்தரராஜன் ஆகியோர் காயமடைந்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் போலீஸார் நிகழ்விடத்துக்கு சென்று டி.எஸ்.பி., காவலரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. டி.எஸ்.பி. வீரமாஜுக்கு பின் தலையில் காயம் ஏற்பட்டு 6 தையல்கள் போடப்பட்டதாகவும், காவலருக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதாகவும் போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை விவரம் அறிய செல்லும் முன் செய்ய வேண்டியது!

சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!

மீன ராசிக்காரர்களின் பலம், பலவீனம்!

ஜெயிலர் - 2: ஷாருக்கானுக்குப் பதிலாக பவன் கல்யாண்?
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

