தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

மயிலம் முருகன் கோயிலில் கிருத்திகை

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 3:25 am

விழுப்புரம் மாவட்டம், மயிலம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணி மாத கிருத்திகை விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானையுடன் காட்சியளிக்கும் மூலவருக்கு பால், தேன், பன்னீர், இளநீர், விபூதி, சந்தனம் உள்ளிட்ட வாசனைத் திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
 தொடர்ந்து, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மூலவருக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 தொடர்ந்து மாலை 6 மணியளவில் வெள்ளித் தேரில் உற்சவர் வள்ளி, தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில் மலைப் பாதையை வலம் வந்தார்.
 விழாவில் சென்னை, புதுச்சேரி, விழுப்புரம், திண்டிவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
 நிகழ்ச்சி ஏற்பாடுகளை பொம்மபுர ஆதீனத்தின் 20-ஆம் பட்டம் சுவாமிகள் செய்திருந்தார்.
 மயிலம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.