திருக்கோவிலூர் கலை, அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரித் தலைவர் ஆர்.செல்வராஜ் தலைமை வகித்து, டாக்டர் ராதாகிருஷ்ணன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பிறகு அவரது வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார். விழாவில் கல்லூரியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களுக்கும் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
விழாவுக்கு, கல்லூரி முதல்வர் டி.எஸ்.வீரமணி, நிர்வாக அலுவலர் ஆர்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழா ஏற்பாடுகளை உடற்கல்வி இயக்குநர்கள் கே.செல்வம், ஜெ.மோகன் ஆகியோர் செய்திருந்தனர். பேராசிரியர் பா.சந்திரசேகரன் நன்றி கூறினார்.
செஞ்சியில்: அனந்தபுரம் அரசுப் பள்ளியில் ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது.
அனந்தபுரம் ரோட்டரி சமுதாயக் குழுமம் சார்பில் அனந்தபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு ரோட்டரி தலைவர் முரளிதரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் பாலு வரவேற்றார்.
முன்னாள் ரோட்டரித் தலைவர் அ.ஜேசுஜூலியஸ்ராஜா அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
மாணவ, மாணவிகளின் பேச்சுப்போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ரோட்டரி மதிவாணன், ரமேஷ், நாராயணன், பேரூராட்சி முன்னாள் தலைவர் கண்ணன், சம்பத், முன்னாள் கவுன்சிலர் கார்த்தி
கேயன், இளங்கோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கள்ளக்குறிச்சியில்: இந்திலி ஆர்.கே.சண்முகம் கல்வியியல் கல்லூரியில் ஆசிரியர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் தலைவர் க.மகுடமுடி தலைமை வகித்தார். தாளாளர் ஜி.எஸ்.குமார், செயலாளர் என்.கோவிந்தராஜூ, கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜி.ஜெயசீலன், நிர்வாக அலுவலர் கு.மோகனசுந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாணவ ஆசிரியர் எஸ்.கார்த்திக் வரவேற்றார்.
மாணவ ஆசிரியை வி.காவியா, எம்.ஆயிஷா பேராசிரியர்களுக்கு ஆசிரியர்தின வாழ்த்துகளை தெரிவித்தனர். துணை முதல்வர் அ.சண்முகம் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் ரூ. 60 கோடி நில மோசடி: துணை ஆட்சியர் சஸ்பெண்ட்

தமிழக அரசுப் பேருந்துகள் ஒசூரில் நிறுத்தம்: கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு போராட்டம்!

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 13) - இன்று நல்ல நாள்!

இன்றைய ராசி பலன்கள் (13.08.2026) 12 ராசிகளுக்கும்! விருச்சிகத்துக்கு வெற்றி!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK


