கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

புதுச்சேரி மதுபானங்கள் விற்பனை: இளைஞர் கைது

செஞ்சியை அடுத்த மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் புதுச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

Updated On :26 மே 2019, 5:34 am IST


செஞ்சியை அடுத்த மேல்களவாய் கூட்டுச்சாலையில் உள்ள அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் புதுச்சேரி மதுபானங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
செஞ்சி, மேல்மலையனூர் பகுதிகளில் புதுச்சேரியில் இருந்து மதுப் புட்டிகளை கடத்தி வந்து விற்பனை செய்வதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாகத் தெரிகிறது.
இதையடுத்து, செஞ்சி காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதன் மற்றும் போலீஸார் மேல்களவாய் அரசு மதுக் கடையுடன் கூடிய மதுபானக் கூடத்தில் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினர். அப்போது, அங்கு புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 1,622 பிராந்தி வகை மதுப் புட்டிகளையும், 144 பீர் வகை மதுப் புட்டிகளையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக, விழுப்புரம் சாலையைச் சேர்ந்த ராஜீ (எ) சாமிக்கண்ணு மகன் பாபு, செஞ்சி சிறுகடம்பூர் கருணா மகன் கார்த்தி (25) ஆகியோர் மீது செஞ்சி போலீஸார் வழக்குப் பதிந்து, கார்த்தியை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள பாபுவைத் தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மதுப் புட்டிகளின் மொத்த மதிப்பு 
ரூ 2 லட்சம் இருக்கும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.