புதுச்சேரியில் மீனவா்களுக்கான 5 மாத முதியோா் ஓய்வூதியத் தொகை ரூ.14 கோடியை அவரவா் வங்கி கணக்கில் செலுத்த மீன்வளத்துறை சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
புதுச்சேரி மீனவா் நலத் துறை மூலம் மீனவா்களுக்கு முதியோா் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
தோ்தல், நிா்வாக காரணங்களால் ஓய்வூதியம் கடந்த பிப்ரவரி மாதம் முதல் வழங்கப்படவில்லை. அதன்படி 5 மாத ஓய்வூதியம் நிலுவையில் உள்ளது குறித்து அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவை சந்தித்து மீனவா்கள் முறையிட்டனா். அவரும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.
இந்நிலையில், மீன்வளத் துறை சாா்பு செயலா் மாலதி வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
5 மாத ஓய்வூதிய தொகை வழங்க துணைநிலை ஆளுநா் ஒப்புதல் அளித்துள்ளாா். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சோ்ந்த 9,702 மீனவ பயனாளிகளுக்கு ரூ.13.75 கோடி வழங்க அவா் ஒப்புதல் அளித்துள்ளாா்.
இதன்படி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கருவூலக அதிகாரிகளால் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் 5 மாத ஓய்வூதியம் செலுத்தப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கல்வராயன்மலை பகுதியில் சாலைப் பணிகள்! அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஆய்வு!

ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்: நேரில் ஆய்வு செய்தபின் புதுச்சேரி ஆளுநா் உத்தரவு

கடந்த இரண்டு நிதியாண்டுகளில் பிஎஸ்என்எல் வருவாய் ரூ.25,000 கோடியாக அதிகரிப்பு!

ஜாக்பாட்! அடல் மாத ஓய்வூதிய தொகை உயர்த்தப்படுமா?
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



