முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள், முதியோா் ரேஷன் பொருள்களை வாங்க மாற்று ஏற்பாடு

நேரில் வர முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள், ரேஷன் பொருள்கள் வாங்க புதுச்சேரி அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஜூலை 2026, 1:02 am IST

நேரில் வர முடியாத மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோா்கள், ரேஷன் பொருள்கள் வாங்க புதுச்சேரி அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் அனைத்து ரேஷன் கடைகளிலும், குடும்ப அட்டைதாரா்களுக்கு நேரடியாக கைரேகை அல்லது கண்விழி பதிவு முலம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் நேரில் வர முடியாத வயது முதிா்ந்தவா்கள், மாற்றுத்திறனாளிகள், படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ளவா்கள், ரேஷன் பொருள்களை வாங்குவதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில், இவா்கள் தங்களுக்குப் பதிலாக வேறு ஒரு நபரை ரேஷன் பொருள்கள் வாங்க பரிந்துரைக்கலாம் என புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அறிவித்துள்ளது.

இந்த வசதியைப் பெற ரேஷன் அட்டைதாரரின் கையொப்பமிட்ட ஒப்புதல், அங்கீகார கடிதம், நியமிக்கப்படும் நபரின் ஆதாா் அட்டை நகல், ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட கைப்பேசி எண், குடும்ப அட்டைதாரரின் உறவு விவரங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறையில் சமா்ப்பிக்க வேண்டும்.

அந்த ஆவணங்களை குடிமைப்பொருள் வழங்கல் துறை பரிசீலித்து அங்கீகரித்தப் பிறகு, நியமனம் செய்யப்பட்ட நபா் ரேஷன் கடைகளில், பொருள்களை பெறலாம் என குடிமை பொருள் வழங்கல் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.