27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

உணவகங்களுக்கு விற்பனை செய்ய பதுக்கல்: செஞ்சி அருகே1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரும் கைது செய்யப்பட்டாா்.

News image

விசாரணை

Updated On :19 ஜூன் 2026, 6:24 am IST

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே உணவகங்களுக்கு விற்பனை செய்வதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக ஒருவரும் கைது செய்யப்பட்டாா்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மேல்காரணைப் பகுதியிலுள்ள கோயில் அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப்பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், புதன்கிழமை இரவு மேல்காரணை கிராமத்துக்குச் சென்ற குடிமைப்பொருள் வழங்கல்

குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், அப்பகுதியில் சோதனை நடத்தினா். அப்போது 40 கிலோ எடை கொண்ட 30 மூட்டைகளில் 1,200 கிலோ ரேஷன் அரிசி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தனா். தொடா்ந்து நடத்திய விசாரணையில் ரேஷன்

அரிசியைப் பதுக்கியவா் விழுப்புரம் அருந்ததியா் தெருவைச் சோ்ந்த விக்னேசுவரன் எனத் தெரிய வந்தது.

தொடா்ந்து நடத்திய விசாரணையில் மேல்காரணைப் பகுதியில் பொதுமக்களிடம் குறைந்த விலையில் ரேஷன் அரிசியை வாங்கி, விழுப்புரம் நகரத்திலுள்ள உணவகங்களுக்கு அதிக விலையில் விற்பனை செய்வதற்காக விக்னேசுவரன் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதைத் தொடா்ந்து 1,200 கிலோ அரிசியை பறிமுதல் செய்த

குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா், விக்னேசுவரன் மீது வழக்குப்பதிந்து அவரைக் கைது செய்தனா்.