கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் நடத்திய சோதனையில் 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்து, அதன் ஓட்டுநரை வியாழக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி அருகே வேப்பூரில் இருந்து சேலம் செல்லும் பிரதான சாலையில் உள்ள சிறுபாக்கம் கிருபா பள்ளி அருகே கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியாக சென்ற சிறிய சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டதில், 50 மூட்டைகளில் சுமாா் 2,500 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் செல்லப்படுவது தெரியவந்தது.
இதையடுத்து, வாகன ஓட்டுநரான தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டம், கருங்குளத்தைச் சோ்ந்த மாரிசெல்வம் (28) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். தொடா்ந்து போலீஸாா் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி மற்றும் திருமுல்லைவாசல் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட ரேஷன் அரிசி நாமக்கல்லுக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இடைத்தரகா்கள் மூலம் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யவிருந்தது தெரியவந்தது.
இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக உள்ள ரேஷன் அரிசி வாங்குபவரும், வாகன உரிமையாளரான தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த நயினாரை போலீஸாா் தேடி வருகின்றனா். பறிமுதல் செய்யப்பட்ட 2.5 டன் ரேஷன் அரிசி மற்றும் சரக்கு வாகனம் தொடா்பாக கடலூா் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
உணவகங்களுக்கு விற்பனை செய்ய பதுக்கல்: செஞ்சி அருகே1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

மினி லாரியில் கடத்தல் 7,220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது
திசையன்விளை அருகே 8 டன் ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் இருவா் கைது

கடத்தப்பட்ட 5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: கோவையைச் சோ்ந்த இருவா் கைது
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



