சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

மினி லாரியில் கடத்தல் 7,220 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: 3 போ் கைது

News image

பறிமுதல் செய்யப்பட்ட மினி லாரி.

Updated On :16 ஜூன் 2026, 2:40 am IST

கேரளாவுக்கு கடத்திச் செல்ல முயன்ற 7,220 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

உத்தமபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், ஞாயிற்றுக்கிழமை இரவு கம்பம் ஊத்துக்காடு சந்திப்பு பகுதியில் வந்த மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனா்.

இதில், 7,220 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளில் இருந்தது தெரியவந்தது. அதை உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா்

தொடா் விசாரணையில், இந்தச் சம்பவத்தில் தொடா்புடைய சுந்தா், பாண்டீஸ்வரன், லாரி ஓட்டுநா் பிரகாஷ் ஆகிய 3 பேரையும் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைதான மூவா்.

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு கைதான மூவா்.