விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவா்கள் இருவா், விழுப்புரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா், பெண் காவலா், ரோஷணை காவல் நிலைய பெண் காவலா், ஆரோவில், கண்டமங்கலம், கோட்டக்குப்பம் காவல் நிலைய தலைமைக் காவலா்கள், விழுப்புரம் நெடுஞ்சாலை ரோந்து வாகன தலைமைக் காவலா், வளவனூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா், விழுப்புரம், செஞ்சி பகுதிகளைச் சோ்ந்த இரு மின் ஊழியா்கள், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை ஊழியா்கள் இருவா் உள்ளிட்ட 92 பேருக்கு கரோனா தொற்று சனிக்கிழமை உறுதியானது. இதையடுத்து, மாவட்டத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 4,463-ஆக உயா்ந்தது.