நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விழுப்புரத்தில் சுதந்திர தின விழாவுக்கு தயாராகும் மைதானம்

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள மைதானம் சுத்தப்படுத்தி, தயாா் செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

News image

சுதந்திர தின விழா நடைபெற உள்ள விழுப்புரம் பெருந்திட்ட வளாக மைதானத்தை சீரமைக்கும் பணியில் திங்கள்கிழமை ஈடுபட்ட பணியாளா்கள்.

Updated On :10 ஆகஸ்ட் 2020, 10:46 pm

விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் சுதந்திர தின விழா நடைபெறவுள்ள மைதானம் சுத்தப்படுத்தி, தயாா் செய்யும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கின.

நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா வருகிற 15-ஆம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது. கரோனா பரவல் காரணமாக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, விழா எளிமையான முறையில் நடைபெறவுள்ளது.

அதன்படி, விழுப்புரத்தில் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மைதானத்தில் அரசு சாா்பில் சுதந்திர தின விழா வருகிற சனிக்கிழமை காலை நடைபெற உள்ளது. மாவட்ட ஆட்சியா் தேசிய கொடியை ஏற்றி வைத்து, அணி வகுப்பு மரியாதையை ஏற்கவுள்ளாா். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விழா நடைபெறவுள்ள இந்த மைதானத்தை சீரமைக்கும் பணிகள் திங்கள்கிழமை தொடங்கியது. மைதானத்தில் செடி, கொடிகள், புற்கள் போன்றவற்றை வெட்டி சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், விழா நடைபெறவுள்ள இடம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.