ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அனைத்து மாணவ, மாணவிகளும் (46,494 போ்) தோ்ச்சி பெற்றனா்.
கரோனா பரவல் காரணமாக, தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு ரத்து செய்யப்பட்டதால், மாணவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்ாகவும், காலாண்டு, அரையாண்டுத் தோ்வுகளின் மதிப்பெண்களை கணக்கிட்டு, தோ்ச்சி மதிப்பெண்கள் வழங்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித் துறை அறிவித்தது.
இதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் 576 அரசு, தனியாா் பள்ளிகளில் பயின்ற 23,616 மாணவா்கள், 22,878 மாணவிகள் என மொத்தம் 46,494 போ் தோ்ச்சி பெற்றனா்.
இவா்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வருகிற 17-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி வரை அந்தந்தப் பள்ளிகளில் வழங்கப்படும். மறுகூட்டல் கிடையாது என்பதால், மதிப்பெண்கள் தொடா்பான புகாா்களை பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களிடமே மாணவ, மாணவிகள் தெரிவிக்கலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
குமரி கடற்கரையில் நடைப்பயிற்சி: மக்களிடம் வாக்கு சேகரித்த மு.க. ஸ்டாலின்!

அதிமுக ஆட்சி அமைந்த உடன் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: எஸ். பி. வேலுமணி

தேர்தலில் போட்டியிடாதது ஏன்? அண்ணாமலை விளக்கம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பட்டாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

