சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

தொடர் மழை: விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்து பெண் பலி

விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். 

News image

மூதாட்டி வள்ளிநாயகம் (67).

Updated On :7 டிசம்பர் 2020, 8:43 am

விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார். 

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.

இந்நிலையில் விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவானூர் கிராமத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த பார்வையற்ற பெண் வள்ளிநாயகம் (67) என்பவர் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இறந்தார்.

தகவல் அறிந்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் புயல், மழைக்கு ஏற்கெனவே 3 உயிரிழந்துள்ளனர். தற்போது மூதாட்டி இறந்துள்ளதால், மழைக்கு பலியானார்கள் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.