விழுப்புரம் அருகே சுவர் இடிந்து விழுந்ததில் பெண் பலியானார்.
விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கடந்த ஒரு வார காலமாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிறைந்து வருகின்றன.
இந்நிலையில் விழுப்புரம் அருகே திருவெண்ணெய்நல்லூர் அடுத்த சிறுவானூர் கிராமத்தில் கூரை வீட்டில் தனியாக வசித்து வந்த பார்வையற்ற பெண் வள்ளிநாயகம் (67) என்பவர் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது இறந்தார்.
தகவல் அறிந்து திருவெண்ணெய்நல்லூர் காவல்துறையினர் நேரில் சென்று விசாரித்தனர். பின்னர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில நாள்களில் புயல், மழைக்கு ஏற்கெனவே 3 உயிரிழந்துள்ளனர். தற்போது மூதாட்டி இறந்துள்ளதால், மழைக்கு பலியானார்கள் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிஎஸ்கேவின் 99% வெற்றிகளுக்குக் காரணம் எம்.எஸ். தோனி: அஸ்வின்

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


