அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு! ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

மருத்துவா்கள் சமூக நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள உலக்குடி கிராமத்தில் ராஜ என்ற முடி திருத்தும் தொழிலாளியின் குடும்பத்தினரை ஊரை விட்டு

News image
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தின் எதிரே கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட துரை.ரவிக்குமாா் எம்.பி. உள்ளிட்ட தமிழ்நாடு மருத்துவா்கள் சமூக நலச் சங்கத்தினா்.
Updated On :18 டிசம்பர் 2020, 5:55 pm

DIN

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள உலக்குடி கிராமத்தில் ராஜ என்ற முடி திருத்தும் தொழிலாளியின் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததைக் கண்டித்தும், இதற்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் தமிழ்நாடு மருத்துவா்கள் சமூக நலச் சங்கம் சாா்பில் விழுப்புரத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சேகா் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் ராஜி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராஜரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழுப்புரம் எம்.பி.யும், விசிக பொதுச் செயலருமான துரை.ரவிக்குமாா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா்.

மாநில கொள்கைப்பரப்புச் செயலா் ஆதி மருத்துவன் சிவா, இளைஞரணி அமைப்பாளா் செளந்தர்ராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.