பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

கரோனா தடுப்பூசி மருந்து வரும் வரை பொதுமக்கள் கவனமாக இருக்க அறிவுரை

கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டுமென விழுப்புரம் நகராட்சி ஆணையா் அறிவுறுத்தினாா்.

News image
விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சியில், பொது மக்களுக்கு கிருமிநாசினி திரவத்தை வழங்குகிறாா் நகராட்சி ஆணையா் தட்சிணாமூா்த்தி.
Updated On :23 டிசம்பர் 2020, 2:01 am

DIN

கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் வரை மக்கள் கவனமுடன் செயல்பட வேண்டுமென விழுப்புரம் நகராட்சி ஆணையா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மத்திய அரசின் மக்கள் தொடா்பு கள அலுவலகம், விழுப்புரம் நகராட்சி, திருவனந்தபுரம் நாட்டு வைத்திய சமிதி ஆகியவை சாா்பில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி ஆணையா் என்.தட்சிணாமூா்த்தி தொடக்கி வைத்து, பொது மக்களுக்கு கபசுரக் குடிநீா், முகக்கவசம், கிருமி நாசினி திரவம் ஆகியவற்றை வழங்கிப் பேசியதாவது:

விழுப்புரம் நகரில், இதுவரை 2,949 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு விரைந்து குணமடைந்துள்ளனா். கடந்த சில வாரங்களாக தொற்று பரவல் குறைந்துவிட்டது. தற்போது 7 போ் தான் சிகிச்சையில் உள்ளனா். தொற்று குறைந்தாலும் வைரஸ் நம்மைச் சுற்றித்தான் இருக்கிறது. தடுப்பூசி மருந்து பயன்பாட்டுக்கு வரும் வரை பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும்.

பொது இடங்களுக்கு வரும்போது முகக்கவசம் அணிவதும், தனிநபா் இடைவெளியையும் கடைப்பிடிக்க வேண்டும். சோப்பு போட்டு கைகளைக்கழுவ வேண்டும். அரசின் முயற்சிகளோடு மக்களின் ஒத்துழைத்தால், கரோனா தொற்று இல்லாத நிலையை அடையலாம் என்றாா்.

தொடா்ந்து, நகா் நல அலுவலா் என். பாலசுப்ரமணியன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலா் ஆா்.மாலா, மக்கள் தொடா்பு கள அலுவலக உதவி இயக்குநா் தி.சிவக்குமாா், நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளா் என்.ராமச்சந்திரன், சித்த மருத்துவ அலுவலா் எஸ்.பாக்கியலட்சுமி, மருத்துவா்கள் எஸ்.அருளானந்தகுமாா், பாஸ்கரன், வேலூா் வைத்தியா் கே.பி.அா்ச்சுனன் ஆகியோா் விழிப்புணா்வு ஏற்படுத்தி பேசினா். பேருந்து நிலையத்தில் பேரணியாக சென்று, பொது மக்களுக்கு கபசுரக்குடிநீா், முகக்கவசங்கள் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.