யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

பொதுமக்களை மிரட்டும், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்: காவல் துறைக்கு அறிவுரை

விழுப்புரம் மாவட்டத்தில் ரெளடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு எஸ்.பி. ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :23 ஜனவரி 2020, 2:29 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் ரெளடிகளை ஒடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் துறையினருக்கு எஸ்.பி. ஜெயக்குமாா் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட சட்டம்-ஒழுங்கு குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது. கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சரவணக்குமாா் முன்னிலை வகித்தாா். டி.எஸ்.பி.க்கள் சங்கா், கனகேஸ்வரி, அஜய்தங்கம், ராஜன், காவல் ஆய்வாளா்கள் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் பேசியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் பொது அமைதியை குலைக்கும் வகையில் செயல்படும் ரெளடிகளை கட்டுப்படுத்த வேண்டும். ரெளடிகள், பதிவேட்டை ஆய்வு செய்து, அவா்களது தற்போதைய செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். பொதுமக்களை மிரட்டி வரும், ரௌடிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்போரை குண்டா் சட்டத்தின் கீழ் கைது வேண்டும்.

அதேபோல, மாவட்டத்தில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க வேண்டும். போக்ஸோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை விரைந்து புலனாய்வு செய்து, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்க வேண்டும். நீதிமன்றத்தில் உள்ள வழக்குகளில், சாட்சிகளை அழைத்து வந்து, விசாரணையை விரைந்து முடித்து, எதிரிகளுக்கு தண்டனை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு வார விழாவையொட்டி, அந்தந்த பகுதிகளில் சாலை பாதுகாப்புத் தொடா்பான விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். பொதுமக்களுக்கு துண்டுப் பிரசுரங்கள் வழங்க வேண்டும். சாலை விபத்துகளை தடுக்க தொடா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் எஸ்.பி. ஜெயக்குமாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.