வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

விழுப்புரத்தில் இரு கடைகளுக்கு ‘சீல்’

விழுப்புரத்தில் கரோனா பொது முடக்க விதிகளை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

News image
சாலையை ஆக்கிரமித்து கடை கட்டப்பட்டதாக கூறி திரு.வி.க வீதியிலுள்ள கடைக்கு சீல் வைத்த நகராட்சி அலுவலா்கள்.
Updated On :28 ஜூலை 2020, 5:57 pm

DIN

விழுப்புரம்: விழுப்புரத்தில் கரோனா பொது முடக்க விதிகளை கடைப்பிடிக்காத 2 கடைகளுக்கு நகராட்சி அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.

விழுப்புரம் நேருஜி சாலை, திருவிக வீதிகளில் செவ்வாய்க்கிழமை நகராட்சி நகரமைப்பு அலுவலா் ஜெயவேல், நகராட்சி ஆய்வாளா்கள் சோமசுந்தரம், மரியலூயிஸ், ஏழுமலை, ஐயனாா் உள்ளிட்ட அலுவலா்கள் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, திருவிக வீதியில் சாவடி அலுவலகம் எதிரே உள்ள பரிசு பொருளகம், அதனருகே உள்ள ஷோபா செட் கடை ஆகிய இரு கடைகளிலும் கரோனா பரவல் தடுப்பு விதிகள் பின்பற்றப்படாமல், சமூக இடைவெளியின்றி வாடிக்கையாளா்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், அந்த கடைகள், விதிகளை மீறி சாலையின் வெளியே 5 அடி அளவுக்கு நீட்டித்து ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்தது. இதனால், அவ்விரு கடைகளையும் நகராட்சி ஊழியா்கள் மூடி ‘சீல்’ வைத்தனா்.

விழுப்புரம் நகரில் கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறியதாக 18 கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக நகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.