விழுப்புரம் மாவட்டம் இருவேல்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மறைந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்திற்கு, அவருடன் தேர்வாகி தமிழ்நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு பயிற்சி பெற்ற காவலர்கள் நிதி திரட்டி ரூ.15,45,900/- ரூபாய்கான காசோலையை, இறந்த காவலர் செந்தில்குமாரின் குடும்பத்தினரிடம் திங்கள்கிழமை நேரில் வந்து வழங்கினர்.
தமிழகத்தில் 2009 ஆம் ஆண்டு தமிழ்நாடு சீருடை பணியாளர் காவலர் தேர்வில் தேர்வாகிய இரு வேல்பெட்ட சேர்ந்த செந்தில்குமார்( 36), பயிற்சி பெற்று, டெல்லி சிறப்பு காவல் படையில் பணிபுரிந்து பின்பு சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார். அப்போது, மஞ்சள் காமாலை நோய் ஏற்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 28.02. 2020 ஆம் தேதி இறந்துவிட்டார்.
இதனால் அவரது குடும்பத்திற்கு உதவிடும் வகையில், அவரது மனைவி சுகந்தி(33), மகன் விக்னேஷ்குமார் (6) அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டு, மேலும் இவர்களது குடும்பத்துக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், 2009 ஆம் ஆண்டு காவலர்கள் குழு உடன் உள்ளனர் என்று கூறிவிட்டு, அவர்களிடம் காசோலையை, திங்கள் கிழமை அவரது வீட்டில், அக்குழுவை சேர்ந்த பிரதிநிதிகள் வழங்கி சென்றனர்.
இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின்

ஆசிய குத்துச்சண்டை: விஸ்வநாத் சுரேஷ் சாம்பியன்

ஆசிய பாட்மின்டன்: அரையிறுதியில் ஆயுஷ்

ஆசிய மல்யுத்தம்: மீனாட்சிக்கு வெள்ளி
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


