சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

நிவர் புயல் எச்சரிக்கை:  வெறிச்சோடிய கிழக்குக் கடற்கரைச் சாலை

தமிழகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

News image

புயல் எச்சரிக்கை:  வெறிச்சோடிய கிழக்குக் கடற்கரைச் சாலை

Updated On :24 நவம்பர் 2020, 12:10 pm

தமிழகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழக முதல்வர் உத்தரவின்படி இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் ஒரு மணியிலிருந்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்துகள், வாகனங்கள் இன்றி பிற்பகல் முதல் வெறிச்சோடி காணப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி கோட்டகுப்பம் பகுதி வரை பேருந்துகள் வாகனப் போக்குவரத்து இன்றி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிற்பகல் முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.பேருந்துகள் இயக்கம் பிற்பகல் 2 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வெளியூர்களிலிருந்து வந்த பேருந்துகள் கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்தப்படும் என தெரிவித்தனர்.பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூட்டமாக இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.