தமிழகத்தில் நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
தமிழக முதல்வர் உத்தரவின்படி இன்று(செவ்வாய்க்கிழமை) மதியம் ஒரு மணியிலிருந்து பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் தமிழகத்தின் கடற்கரை ஒட்டிய கிழக்கு கடற்கரை சாலையில் பேருந்துகள், வாகனங்கள் இன்றி பிற்பகல் முதல் வெறிச்சோடி காணப்படுகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் தொடங்கி கோட்டகுப்பம் பகுதி வரை பேருந்துகள் வாகனப் போக்குவரத்து இன்றி சாலை வெறிச்சோடி காணப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பிற்பகல் முதல் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.பேருந்துகள் இயக்கம் பிற்பகல் 2 மணிக்கு மேல் நிறுத்தப்பட்ட பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பிற்பகல் ஒரு மணிக்கு மேல் வெளியூர்களிலிருந்து வந்த பேருந்துகள் கள்ளக்குறிச்சி, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று பயணிகளை இறக்கிவிட்டு நிறுத்தப்படும் என தெரிவித்தனர்.பேருந்துகள் நிறுத்தப்பட்டதால், விழுப்புரம் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் கூட்டமாக இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திமுக அரசு வாங்கிய கடன் எங்கே போனது? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டாப் ஆர்டரில் கலக்கும் இளம் இந்திய வீரர்கள்; ரிக்கி பாண்டிங் பாராட்டு!

பிகாரில் கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் பலி! சிகிச்சையில் உள்ள 6 பேருக்கு பார்வை இழப்பு!
திரிணமூல் காங்கிரஸ் பெயரில் பணம் பறிக்கும் பாஜக: மமதா பானர்ஜி
வீடியோக்கள்

“தில்லா, கெத்தா தனியா நிற்கிறோம்”: புதுச்சேரியில் Vijay பிரசாரம்
இணையதளச் செய்திப் பிரிவு

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு


