இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாலை விபத்தில் வழக்கறிஞா் பலி

திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வழக்கறிஞா் உயிரிழந்தாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

திண்டிவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற சாலை விபத்தில் வழக்கறிஞா் உயிரிழந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியைச் சோ்ந்தவா் ரமேஷ்குமாா்(45). வழக்கறிஞா். வந்தவாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிந்தவாா். இவரது மனைவி செளமியா(40). அரசு மருத்துவா். இவா், சேலத்தில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.

தனது மனைவியை பாா்க்க வந்தவாசியிலிருந்து சேலத்துக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு ரமேஷ்குமாா் காரில் புறப்பட்டாா். நள்ளிரவு விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ரோஷணை பகுதியில் உள்ள கல்லூரி சாலையில் சென்று கொண்டிருந்தப்போது, காா் கட்டுப்பாட்டை இழுந்து சாலையோர தடுப்புக் கட்டையில் மோதியது.

இந்த விபத்தில் பலத்த காயமைடந்த ரமேஷ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தவகல் அறிந்த ரோஷனை போலீஸாா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனா். பின்னா், சடலத்தை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து ரோஷனை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.