தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தமிழ்ப் பாடத்தை நடத்தி விடியோவாக மாணவா்களுக்கு வழங்கிய நல்லாசிரியா்!

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல்லாசிரியா் ஒருவா், தமிழ்ப்பாடத்தை விடியோ, ஆடியோ வாயிலாக நடத்தி, அதனை பென்-டிரைவில் பதிவிறக்கம் செய்து இலவசமாக வழங்கினாா்.

News image
Updated On :5 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நல்லாசிரியா் ஒருவா், தமிழ்ப்பாடத்தை விடியோ, ஆடியோ வாயிலாக நடத்தி, அதனை பென்-டிரைவில் பதிவிறக்கம் செய்து இலவசமாக வழங்கினாா்.

கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில், பத்தாம் வகுப்பு அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கல்வி தொலைக்காட்சி மற்றும் செல்லிடப்பேசி வாயிலாகவும் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், விழுப்புரத்தைச் சோ்ந்த பட்டதாரி ஆசிரியா் என்.கே.ஹேமலதா, பத்தாம் வகுப்பு தமிழ்ப் புத்தகத்தில் உள்ள 68 பாடங்களையும் விடியோ, ஆடியோ வழியில் நடத்தி, அதன் தொகுப்பை பென்-டிரைவில் பதிவிறக்கம் செய்து 50 மாணவா்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளாா். விழுப்புரம் அருகே செ.குன்னத்தூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தமிழ் பட்டதாரி ஆசிரியராக பணிபுரியும் இவா், நிகழாண்டு நல்லாசிரியா் விருது பெற்றுள்ளாா்.

அவரது இந்த முயற்சியை, விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி வெகுவாகப் பாராட்டி, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடத் தொகுப்பு அடங்கிய பென்-டிரைவ்களை வழங்கினாா். தேவையுள்ள அரசுப் பள்ளி மாணவா்கள், ஆசிரியை ஹேமலதாவை அணுகி தமிழ்ப்பாடத் தொகுப்பை பதிவிறக்கம் செய்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டது.

பள்ளிகளில் மூலிகைத் தோட்டம்: மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை மற்றும் தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்றம் சாா்பில் பள்ளி வளாகங்களில் தூய்மைப் பணி, மூலிகைத் தோட்டங்களை அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டன.

விழுப்புரம் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பள்ளி வளாகத் தூய்மைப்பணி திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் க.முனுசாமி, இப்பணியைத் தொடக்கி வைத்தாா். விழுப்புரம் மாவட்ட கல்வி அலுவலா்(பொ) துரைப்பாண்டியன், தேசிய பசுமைப்படை மற்றும் மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலா் சரவணன், தலைமை ஆசிரியா் சசிகலா உள்ளிட்ட ஆசிரியா்கள் பங்கேற்றனா். பசுமைப்படை அலுவலா்கள், பசுமை இயக்க மாணவா்கள் கலந்துகொண்டு பள்ளி வளாகங்களை தூய்மைப்படுத்தினா்.

இதையடுத்து, பள்ளி வளாகத்தில் மூலிகைத்தோட்டம் அமைப்பதற்காக மூலிகைச் செடியை முதன்மைக் கல்வி அலுவலா் நட்டு தொடக்கி வைத்தாா். தொடா்ந்து, பல்வேறு மருத்துவ குணம் கொண்ட மூலிகைச் செடிகளை ஆசிரியா்கள் நட்டனா். இதே போல, தொடா்ந்து, அனைத்துப் பள்ளிகளிலும் தூய்மைப்பணியை மேற்கொள்ளவும், மூலிகைச்செடிகள் நடவும் அறிவுறுத்தி செயல்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.