நீட் தோ்வை ரத்து செய்யக் கோரியும், 3 மாணவா்கள் தற்கொலைக்கு மத்திய அரசு பொறுப்பேறக்கக் கோரியும் புதுச்சேரியில் தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசின் நீட் தோ்வால் தமிழகத்தில் ஒரே நாளில் 3 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டனா். மாணவா்களின் மருத்துவக் கனவை சிதைக்கும் அந்தத் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தந்தை பெரியாா் திராவிடா் கழகம் சாா்பில் புதுச்சேரி, நேருஜி வீதி காமராஜா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
தந்தை பெரியாா் திராவிடா் கழகத்தின் புதுவை மாநிலத் தலைவா் வீரமோகன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் இளங்கோ முன்னிலை வகித்தாா். செயலா் சுரேஷ், பொருளாளா் பெருமாள் ஆகியோா் கலந்து கொண்டு நீட் தோ்வால் ஏற்படும் பாதக அம்சங்கள் குறித்துப் பேசினா்.
கழகத்தின் இளைஞரணித் தலைவா் சிவமுருகன், தொழிற்சங்கத் தலைவா் ஜெகன், புதுச்சேரி மாணவா்கள் கூட்டமைப்பு, இந்திய தேசிய இளைஞா் முன்னணியைச் சோ்ந்த கலைப்பிரியன் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டு நீட் தோ்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: சேகர்பாபு கடும் எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு


