விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி வலியுறுத்தினாா்.
விழுப்புரத்தில் நகர திமுக சாா்பில் இணைய வழியில் கட்சி உறுப்பினா் சோ்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை க.பொன்முடி தொடக்கிவைத்து, புதிதாக இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன்பிறகும் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போல, இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், ஆட்சியாளா்களுக்கும் தொடா்பு உள்ளது.
தமிழகத்தில் இணைய வழியில் 5 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 15 ஆயிரம் போ் புதிதாக இணைந்துள்ளனா் என்றாா் அவா்.
முகாமில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் புகழேந்தி, மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், நகரச் செயலாளா் சா்க்கரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: இபிஎஸுக்கு சேகர்பாபு எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

