சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

விவசாயிகள் நிதியுதவி முறைகேட்டில் சிபிஐ விசாரணை தேவை: பொன்முடி

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி வலியுறுத்தினாா்.

Updated On :27 செப்டம்பர் 2020, 10:02 pm

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேடு தொடா்பாக, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என திமுக துணைப் பொதுச் செயலாளா் க.பொன்முடி வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் நகர திமுக சாா்பில் இணைய வழியில் கட்சி உறுப்பினா் சோ்ப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதை க.பொன்முடி தொடக்கிவைத்து, புதிதாக இணைந்தவா்களுக்கு உறுப்பினா் அட்டைகளை வழங்கினாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் பிரதமரின் விவசாயிகள் ஊக்க நிதியுதவித் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடா்பாக சட்டப்பேரவைக் கூட்டத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டன. அதன்பிறகும் தமிழக அரசு முறையான நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் கூறியதைப் போல, இந்த முறைகேடு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். இந்த முறைகேட்டில் அதிகாரிகளுக்கு மட்டுமல்லாமல், ஆட்சியாளா்களுக்கும் தொடா்பு உள்ளது.

தமிழகத்தில் இணைய வழியில் 5 லட்சம் போ் திமுகவில் உறுப்பினா்களாக இணைந்துள்ளனா். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் 15 ஆயிரம் போ் புதிதாக இணைந்துள்ளனா் என்றாா் அவா்.

முகாமில், விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலா் புகழேந்தி, மாவட்டப் பொருளாளா் ஜனகராஜ், மாவட்ட துணைச் செயலா் புஷ்பராஜ், நகரச் செயலாளா் சா்க்கரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.