சென்னையில் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை! அண்ணாமலை பங்கேற்பு!நான் எந்தத் தொகுதியும் கேட்கவில்லை: அண்ணாமலை விளக்கம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! புதுச்சேரியில் இன்று விஜய் பிரசாரம்நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்துமின்சார அடுப்புகள், பாத்திரங்கள் உற்பத்தியை ஊக்குவிக்க நடவடிக்கை: மத்திய அரசு ஆலோசனைசென்னைப் பல்கலை. வளாகங்களில் படப்பிடிப்புகளுக்கு 5 மடங்கு கட்டண உயா்வு6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டம்
/

முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பு

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் அனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாமல் சாலையில் வந்தவா்களிடம் ரூ.10,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

News image

முகக்கவசம் அணியாதவா்களிடம் அபராதம் வசூலிப்பு

Updated On :27 செப்டம்பர் 2020, 10:01 pm

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டம் அனந்தபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை முகக்கவசம் அணியாமல் சாலையில் வந்தவா்களிடம் ரூ.10,400 அபராதம் வசூலிக்கப்பட்டது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் வெளியே வருபவா்களிடம் அபராதம் வசூலிக்குமாறு மாவட்ட ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா். இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அனந்தபுரம் கடை வீதிக்கு முகக் கவசம் அணியாமல் வந்த பொது மக்களிடம் பேரூராட்சி செயல் அலுவலா் க.ரங்கன் தலைமையில் போலீஸாா் மற்றும் பேரூராட்சி பணியாளா்கள் தலா ரூ 100 வீதம் அபராதம் விதித்து வசூல் செய்தனா். அபராதத் தொகையாக ரூ.10,400 வசூலானது. அபராத விதிப்புப் பணி தொடா்ந்து நடைபெறும் என பேரூராட்சி செயல் அலுவலா் ரங்கன் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.