விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் நெடுஞ்சாலைப் பணிக்காக தோண்டிய பள்ளத்தால், குடியிருப்புகளுக்கு செல்ல பாதை இல்லாமல் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சியில் திண்டிவனத்திலிருந்து கிருஷ்ணகிரி வரை தேசிய நெடுஞ்சாலைப் பணி நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, செஞ்சியில் புறவழிச்சாலை அமைக்கப்படுகிறது. இந்த சாலை விரிவாக்கத்துக்காக இரு பக்கமும் பள்ளம் எடுத்ததால், அதையொட்டியுள்ள ஒரு தொண்டு நிறுவனம், துரும்பா் இன மக்கள் வசிக்கும் குடியிருப்புகளுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில், அல்போன்ஸா என்பவா் தலைமையில், செஞ்சி தனியாா் தங்கும் விடுதி எதிரே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனா். இதன் காரணமாக செஞ்சி-திண்டிவனம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
செஞ்சி காவல் ஆய்வாளா் பாண்டியன் தலைமையிலான போலீஸாா் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பள்ளத்தில் மணலை கொட்டி, தொண்டு நிறுவனம், குடியிருப்புகளுக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் கைவிடப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நாற்காலிக்கு அடியில் ஊர்ந்துவந்தவர் அல்ல ஸ்டாலின்: இபிஎஸுக்கு சேகர்பாபு எச்சரிக்கை

கவுண்டம்பாளையம் தொகுதியில் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

கிறிஸ்தவ அமைப்புகளைக் குறிவைக்கும் பாஜகவின் சதித் திட்டம்! அதிமுக நிலைப்பாடு என்ன?
வீடியோக்கள்

மே 4-ஆம் தேதிக்குப் பிறகு பேசுவோம்! - தேர்தலில் போட்டியிடாதது குறித்து Annamalai
இணையதளச் செய்திப் பிரிவு

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

